உளுந்தூர்பேட்டை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும், பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் பி.ஸ்டாலின் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், இ.அலமேலு, வி.சாமிநாதன், நகரச் செயலாளர் பி.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், ஜெ.ஜெயக்குமார், ஏ.தேவி, பி.சின்னராசு, மு.சிவக்குமார், கே.வீரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.