districts

img

குறைந்த மின்னழுத்தத்தால் பாதிக்கும் மக்கள்: புதிதாக மின் மாற்றிகளை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

வேலூர், செப். 25 – வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டத்தில் உள்ள சின்ன செட்டி குப்பம், லெனின் நகர் பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக குறைந்த மின்ன ழுத்த மின்சாரம் வருவதால் மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்து வருகிறது. இதனால், புதிதாக மின்மாற்றிகள் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் டி.டி.மோட்டூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கிளைச் செயலாளர்கள் எம்.ராஜசேகர், பி.வசந்தி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பேர்ணாம்பட்டு தாலுகா செயலாளர் சி.சரவணன் துவக்கி வைத்தும்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனிவாசன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.குணசேகரன், பகுதி செயலாளர் தலித் பாஸ்கர், கோட்டீஸ்வரன் (வாலிபர் சங்கம்) கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இரு பகுதிகளுக்கும் 15  நாட்களுக்குள் மின்மாற்றி களை மாற்றி தருவதாக தெரிவித்தனர்.