districts

img

சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜன.31 – கே.வி.குப்பம் அருகே துருகம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி பலியான இளம் பட்டதாரி பெண் குடு ம்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவா ரணம் அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வேலூர் மாவட்டம்,  கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள துருகம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளம் பெண் அஞ்சலி குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் நிவார ணம் மற்றும் குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களை வன விலங்கு தொல்லையில் இருந்து பாது காக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கே.வி.குப்பம் பேருந்து நிலையம் எதிரில் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கிருஷ்ணமூர்த்தி வெங்க டேஷ், மகேந்திரன், நந்த குமார், கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவ சாய சங்க மாநிலச் செய லாளர் பி.துளசி நாராயணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தும் மாவட்டச் செய லாளர் கே.சாமிநாதன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்டத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், பொரு ளாளர் நரசிம்மன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் செ.ஏகலை வன், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, விவசாய சங்க நிர்வாகிகள் செந்தாமரை, ரவி, நதியா வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பலி யான  அஞ்சலியின் தந்தை, தாய், சகோதரர்கள், உற வினர்களும் இந்த போராட் டத்தில் கலந்து கொண்ட னர்.