செங்கல்பட்டு,பிப்.10- செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு காலாவதியான செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடக் கோரி, இடதுசாரி கட்சிகள் ,மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் சனிக் கிழமையன்று (பிப் 10) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சி எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் வரம்பிற்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. 60 கிலோமீட்டருக்கு இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடி இருக்கக் கூடாது மற்றும் திட்டபடி தொகை வசூல் ஆகிய முடிந்த பிறகு பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பரனூர் சுங்கச்சாவடியில் பின்பற்றவில்லை. மூன்று ஆண்டுகளில் விதிகளை மீறி போய் 28 கோடி ரூபாய் வசூலித்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1956 க்கு முன்பாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திட்ட மதிப்பீட்டில், சேர்க்கக்கூடாது என்ற விதியை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வரு கிறது. இதுபோன்று பல்வேறு வகைகள் முறைகேடாக செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஜாகிர்உ சேன், சம்சுதின், மனிதவள மேம்பாட்டு கழக நிர்வாகி சுரேஷ், வியாபாரிகள் சங்க நிர்வாகி மன்சூர்அலி, பாட்டாளி வர்க்க சமரன் அணி மாநில அமைப்பாளர் கே.மணி, தேமுதிக ஒன்றிய செயலாளர் எ.எத்திராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ் உள்ளிட்ட பலர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.ராஜ்குமார், விசிக மாவட்ட செயலாளர் தே.தென்னவன், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.