districts

img

தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதை கண்டித்து வியாழனன்று (மார்ச் 28) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் வசீகரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.