கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சனிக்கிழமையன்று (ஆக.17) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, ஐடி ஊழியர்கள் சங்கம் (யுனைட்), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. டில்லிகுமார் (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹெலன் தேவகிருபை (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு), ஆர்,விஜயா (மாதர் சங்கம்), அருண் (யுனைட்), அனந்த பிரியன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.