அரசியலமைப்புச் சட்டத்தையும், தமிழக சட்டமன்ற மரபையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பூர் 37ஆவது வட்டம் எஸ்.எம். நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் டி.சரவணன், ஜீவா முனுசாமி, ஞானமணி, டி.ஆர்.தினேஷ், பருவதராஜ், தமீம், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.