districts

img

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க கோரிக்கை

புதுச்சேரி,டிச.5- உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைத்து வழங்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு முன்வர வேண்டும் என்று மருந்து துறையின் மார்கெட்டர்ஸ் அசோசியேஷன் மாநாடு வலியுறுத் தியுள்ளது. மருத்துவ துறையின் மார்கெட்டர்ஸ் அசோசியேஷன் (ஏஐபிபிஈ) புதுச்சேரி மாநில மாநாட்டிற்கு  செந்தில் குமார் தலைமை தாங்கினார். அசோசியேஷன்  தமிழ்நாடு மாநிலத் தலைவர்  நாகராஜ், மண்டல தலைவர்கள் ஜெயசந்திரன், அந்தோனி மண்டல செயலாளர்  நரசிம்மன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில் எப்எஸ்எஸ்ஏஐ  மற்றும் கிரோநோபார்மக் கோலோஜி ஆகிய  தலைப்புகளில் மருத்துவர்கள் கவிமணி,  முத்துக்குமாரசாமி ஆகியோர் பேசினர். எதிர் நீச்சல் என்ற தலைப்பில் பேராசிரியர் ந.இளங்கோ சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் இம்மாநாட்டில் மருந்து துறையின் மார்க்கெட்டர்ஸ் அசோசியேஷன் புதுச்சேரி தலைவராக எம்.கலியமூர்த்தி, செயலாளர் ஆர்.ராஜேஷ்,பொருளாளராக எஸ்.சுப்பிரமணியன் உட்பட 7 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை ஒன்றிய பாஜக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.