districts

img

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

சென்னை, பிப்.. 3- கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணலி சின்னசாமி நகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தின் தலைவர் கே.நாகப்பன், செயலாளர் எஸ்.முஷீர் அகமது ஆகியோர் மாநகராட்சி 19ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்  காசிநாதனிடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னசாமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மின் கம்பங்களை  அகற்றி கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும். பழைய சாலைகளை ஆழப்படுத்தி புதிய சாலைகள்  அமைக்க வேண்டும். பிரதான சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். மழைநீர் கால்வாயை தூர்வர வேண்டும். மழைநீர் கால்வாய் இல்லாத சாலைகளில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். குடிநீர் வழங்காமலே குடிநீர் கட்டணம்  கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. எனவே உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.