திருவண்ணாமலை, செப்.2- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, காரம் ஊராட்சியில் உள்ள மாலையிட்டான் குப்பம் பகுதியில் சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கீழ் சலுகை ஒன்றிய கவுன்சிலர் தேவி ராஜேந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் கோரிக் கையை ஏற்று, காரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அவ ருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், சிறு பான்மை மக்கள் வசிக்கும் பகுதிக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்து, 492 மதிப்பில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பாக சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறு பான்மை மக்கள் நலக் குழு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் யாசர் அராபத், மற்றும் ராஜேஷ் என்கிற மணி, ஜமாத் நிர்வாகிகள் ஹாஜா ரஷீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.