districts

img

டெல்லி கேட், நவாப் கோட்டை ஏரியை பாதுகாத்திட வேண்டும் ஆற்காடு வட்ட மாநாடு கோரிக்கை

 ராணிப்பேட்டை,அக். 20– ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா 24 வது மாநாடு எம். கோதண்டம் தலைமையில் ஞாயிறன்று (அக். 20) எஸ்.சி. ஆரியப்பன் நினைவரங்கில் நடைபெற்றது.           இதில் மூத்த உறுப்பினர் எஸ்.எல். உலகநாதன் கொடியேற்றி வைத்தார். பி. கன்னியப்பன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் என். காசிநாதன் துவக்கிவைத்து பேசினார். வட்டார செயலாளர் எஸ். செல்வம் அறிக்கை முன் வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.  தீர்மானங்கள் ஆற்காடு, திமிரி நகரத்திற்கு வட்டச் சாலை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் துறை வாரியாக போதுமான மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். வரலாற்று சின்னமாக விளங்கும் டெல்லிகேட், நவாப் கோட்டை போன்றவைகள் பாதுகாக்க வேண்டும். ஆற்காடு நவாப் ஏரியில் நகரத்தின் கழிவு நீர் விட்டு, நகர மக்களின் பொது சுகாதாரத்தை பாதிக்கும் நிலையை மாற்றி ஏரியை சுத்தம் செய்யும் துர்நாற்றத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார குழு தேர்வு 11 பேர் கொண்ட ஆற்காடு தாலுகா குழுவுக்கு  செயலாளராக ஜி. மதியழகன் தேர்வு செய்யப்பட்டார்.