districts

img

பட்டா இல்லாமல் 60 ஆண்டுகளாக அவதிப்படும் இருளர் இன மக்கள்

விழுப்புரம், நவ.25- திருவெண்ணைநல்லூர் அருகே 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த இருளர் இன மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டம், பையூர் கிராமத்தில் அரசு வாய்க்கால் புறம்போக்கில் கடந்த 60 ஆண்டுகளாக, பழங்குடி இனத்தை சேர்ந்த 10 இருளர் குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர்.  அவர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டு 10- க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர், துறை அதி காரிகள், பழங்குடி ஆணையம் என பல இடங்களுக்கும் மனு கொடுத்தனர். ஆனால். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் வி.கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், முதலமைச்சரின் உத்தரவுகளை பின்பற்றி இருளர் இன மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.