districts

img

‘சுடுகாடே இல்லாத’ குருவிநத்தம் பெரியார் நகர் தலித் மக்கள்

புதுச்சேரி,ஆக. 12-

      பாகூர் கொம்யூன் பெரி யார் நகரில் அடிப்படை வசதி கள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை யன்று (ஆக.12) தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

     புதுச்சேரி மாநிலம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட குரு விநத்தம் பெரியார் நகர். இங்கு வசிக்கும் தலித் மக்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். சுடுகாடு அமைத்து, சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.  

    தொடர்ந்து ஏற்படும் மின்தடைக்கு காரணமான மின்னழுத்தம் செல்லும் கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகள் மாற்றி தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த வேண்டும். பால் உற்பத்தி செய்யும் விவ சாயிகளுக்கு கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி குருவிநத்தம் பெரி யார் நகரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கமிட்டி உறுப்பினர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்தும், தமிழ்ச்செல்வன் நிறைவு செய்தும் பேசினர். பாகூர் கொம்யூன் செய லாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.