districts

img

கொள்முதல் விலையை உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.26- கெலமங்கலம் அருகே அனுமந்தபுரம் ஊராட்சி நெல்லுகுந்தி கிராமத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளுக்கு தேவையான நேரத்தில் மருத்துவம் பார்க்கும் வசதியை ஏற்படுத்தவேண்டும், பால் உற்பத்தி யாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனடியாக சொசைட்டி கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் துர்வாசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.ஜெயராமன், சங்க கிளை செயலாளர் செயமணிபாலன், கெல மங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா ஆகி யோர் கலந்து கொண்டனர்.