வேலூர், ஆக.31- வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உழவர் களஞ்சியம் வேளாண்மை பொருட்கள் விற்பனை கண்காட்சி சனிக்கிழைமை நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு வேந்தர் கோ.விசு வநாதன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் அபூர்வா கலந்து கொண்டார். வேளாண்மை துறை பேராசிரியர் எஸ்.பாபு வரவேற்றார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிறந்த கண்காட்சி அரங்குகள் மற்றும் விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.