districts

வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் கடலூரில் அலைமோதிய கூட்டம்

கடலூர்,ஜன.19- பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு வந்து  மீண்டும் வேலைக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஏராள மானோர் வந்திருந்தனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளுக்கு செல்வதற்காக வந்திருந்தனர். சென்னைக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், போதுமான பேருந்து இல்லா ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.   பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதற்கு முன்னே ஓடிச்சென்று ஏரி இடம் பிடித்து விடுவதால்,  முதிய வர்கள், குழந்தைகளோடு வந்தவர்கள் பேருந்தில் இடம் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டுகின்றனர். இந்நிலையை சரிசெய்ய போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.