districts

img

புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை அகற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர், ஜன.29-  பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வரும் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி, பாவேந்தர் சாலையை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள், வணிக வளாகங்கள், தேவால யம், கோவில்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த செப்டம்பரில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப் பட்டது. மதுபான கடை திறக்கப் பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது முதலே சிபிஎம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது . மேலும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனுவாக வழங்கப்பட்டது. அதையும் மீறி அரசு மதுபான கடை திறக்கப்பட்டது மட்டுமின்றி காலை முதலே கள்ளத்தளமாக மது விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த அரசு மதுபான கடையால் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதிய வர்கள் அச்சத்துடன் இந்த பகு தியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பலர் மது அருந்திவிட்டு இரவு நேரங்க ளில் தேவாலயம் முன்பு விழுந்து கிடக்கின்ற னர். இந்நிலையில், சிபிஎம் சார்பில் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் உள்ள கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மறைமலைநகர் நகர செயலாளர் பாலாஜி தலைமையில், நடை பெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், கே.சேஷாத்திரி, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. சண்முகம், நாராய ணன், மதிமுக நகர நிர்வாகி சார்லஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.