districts

img

நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு,நவ. 19-  ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் காட்டாங் குளத்தூர் ஒன்றியம், ஒழலூர் கிராமத்தில் பணிச்  சான்று உள்ள அனை வருக்கும் உடனடியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் தினக்கூலியுடன் முழுமை யான வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி செங்கல்பட்டு பகுதிக்குழு உட்பட்ட ஒழலூர் சிபிஎம் கிளையின் சார்பில் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு கிளைச் செயலாளர் ஜி.அருண் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், எம். கலைச்செல்வி, செங்கல்பட்டு பகுதி குழு செயலாளர் கே. வேலன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர் பி.சண்முகம் பகுதி குழு உறுப்பி னர்கள் என்.அன்பு என்.அருணாச்சலம் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் உடனடியாக வேலை வழங்கப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் போரா ட்டம் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டது.