districts

img

மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஆக.29- ஒரே வீட்டில், ஒரே கட்டிடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு களை ஒரே இணைப்பாக ஒருங்கிணைந்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய உள்ள புதிய நடைமுறையைக் கைவிட வேண்டும். 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும், 5 ஆயிரம் ரூபாய்கு மேலான மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்ட  வேண்டும் என்று நுகர்வோருக்கு 100 ரூபாய் கூடுதல் செலவு வைக்கும் நடை முறையைக் கைவிட வேண்டும். பழுதடைந்து அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பிகளை மாற்றி தரமான புதிய கம்பிகளைப் பொருத்தி விபத்துகளையும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள மின்வாரிய அலு வலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகர செயலாளர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.மேகநாதன்,கே.வீர மணி, எஸ்.நீலா, ஜி.ஜெயக்குமார் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.