districts

img

அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னசேலத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜன.9- பொதுமக்களின் அடிப்படை கோரிக்கை களை வலியுறுத்தி சின்னசேலம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து தலைமை தாங்கி னார். சின்ன சேலம் நகரில் சாலைகளில் இரு புறமும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், சின்னசேலம் அம்சகுளம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூட கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், சின்னசேலம் ரயில் பாதை பணிகளை உடனே விரைந்து முடிக்கவேண்டும், நைனார் பாளை யத்திலிருந்து, பி.மாத்தூர் செல்லும் காட்டு வழிச்சாலையை அகலப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு பி.சுப்பிரமணியன், விதொச மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி,வட்டக்குழு பழனி வட்டக் குழு உறுப்பினர்கள்  எல். ராமசாமி, பி.லெனின்,என்.ராமச்சந்திரன்,ஆர்.பாபு, கே.சுதா,கே.ஆறுமுகம் ஆகியோர் இதில் பேசினர்.