திருவண்ணாமலை, டிச. 29- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் ரயில்வே மேம்பால பணி கள் கடந்த நான்கு ஆண்டு களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேம்பாலப் பணி கள் காரணமாக போளூர் நகரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், தொழி லாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள் அனைவரும் போளூருக்கு வந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரை ந்து முடிக்க வேண்டும். திருப்பதி-ராமேஸ்வரம், ஹவுரா, வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில்கள் போளூர், ஆரணி ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போளூர் பேருந்து நிலையம் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப. செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவாஜி, தாலுகா செயலாளர் ரவி தாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.