திருவள்ளூர், ஏப் 9- திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்குகளை கேட்டு சிபிஎம் சார்பில் இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற் கொண்டனர். அத்திப்பட்டு புதுநக ரில் துவங்கி மவுத்தம்பேடு, கே.ஆர்.பாளையம், புதுப் பேடு, மெரட்டூர், அரியன்வா யல், கல்பாக்கம், தோட்டக் காடு, அனுப்பப்பட்டு, மேட்டுப்பாளையம், நாலூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநி யோகம் செய்து பிரச்சாரம் செய்தனர். பொன்னேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கே.விஜயன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மீஞ்சூர் ஒன்றிய செயலா ளர் இ.ஜெயவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கதிர்வேல், சிஐடியு நிர்வாகிகள் ஜி.வினாயக மூர்த்தி, என்.ரமேஷ்குமார், எஸ். நரேஷ்குமார், செந்தில், பாண்டியன், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சைந்தவி, சஞ்ஜய், ரஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.