கடலூர், ஜன.23- கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜி.கலிய பெருமாள் வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை சிதம்பரம் அருகே செங்கல்மேடு கிராமத்தில் காலமானர். அவருக்கு வயது 88. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு,தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.ராமச்சந்திரன், சுப்புராயன், பி.தேன்மொழி, பிரகாஷ், ராஜேஷ் கண்ணன், அமர்நாத், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். தனசேகரன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செய லாளர் சரவணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, நகர செயலாளர் அமுதா உள்ளிட்ட கட்சியினர் அவரது உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மாலையில் தோழர் கலிய பெருமாள் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தலைவர்கள் இரங்கல் தோழர் கலியபெருமாள் இறந்த தகவல் அறிந்து கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் ,மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், காங் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் தொலை பேசி மூலம் குடும்பத்தி னரிடம் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த ஜி.கலிய பெருமாளுக்கு கனகயாள் (77) என்ற மனைவியும், 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.