சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே ஒன்றியக் குழு உறுப்பினர் சதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.