districts

img

சிதம்பரம் நகரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடுகள் சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்

சிதம்பரம், நவ.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர 20-வது மாநாட்டில் மூத்த தோழர் மூசா செங்கொடியை ஏற்றி வைத்தார். எஸ். குமரவேல் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன் வரவேற்றார். கலியமூர்த்தி, மல்லிகா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நகர செயலாளர் எஸ். ராஜா வேலை அறிக்கையை சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையா, பி. தேன்மொழி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு நிறைவுரையாற்றினார். நகரக்குழு 15 பேர் கொண்ட நகரக்குழுவின் செயலாளராக எஸ். ராஜா தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் நகராட்சியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.  சொந்தமாக வீடு இல்லாமல் போராடி வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையை அரசு கையகப்படுத்தி பன்நோக்கு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.