திருவள்ளூர், ஏப். 11- திருவள்ளூர் மக்கள வைத் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரி வித்து மீஞ்சூரை அடுத்த திருவெள்ளவாயல் பஜாரில் கை சின்னத்திற்கு வாக்கு களை கேட்டு புதனன்று பிரச்சாரம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.விஜ யன், மாவட்ட குழு உறுப்பி னர் பி.கதிர்வேல், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், ஒன்றிய குழு உறுப்பினர் நித்தி யானந்தம், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜி.விநாயக மூர்த்தி, ரமேஷ்குமார், செந்தில், வாலிபர் சங்கத் தின் பகுதி தலைவர் விநாயக மூர்த்தி ஆகியோர் பேசினர்.