districts

img

கோயம்பேடுபேருந்து நிலையத்தை கல்வி வளாகமாக மாற்றுக! வாலிபர் சங்க பகுதி மாநாடு கோரிக்கை

சென்னை, நவ.18- கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை கல்வி வளாகமாக மாற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி மாநாடு ஞாயிறன்று (நவ. 17) வடபழனியில் நடைபெற்றது. பகுதி தலைவர் அ.ஜானகிதேவி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தொடங்கி வைத்துப் பேசினார். பகுதிச் செயலாளர் மணிமாறன் வேலை அறிக்கையும், பொருளாளர் கார்த்தி வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாவட்டப் பொருளாளர் திவாகர் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் வி.சிங்காரவேலன் நிறைவுரை ஆற்றினார். 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக சுந்தர்ராஜன், செயலாளராக ராஜ்குமார், பொருளாளராக மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.