சிதம்பரம், நவ.12- வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாகவே கட லூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் குமாரமங்கலம், வசபுதூர், நடராஜபுரம், தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கோவிலாம் பூண்டி மற்றும் கொள்ளிடக்கரை பகுதிகளான வேலக்குடி, அகரநல்லூர், வல்லம்படுகை ஏராளமான கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு, நாற்றங்கால் என நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளகாடாக காட்சி யளிக்கின்றன. இதேபோல் பரங்கிப் பேட்டை, குமராட்சி, காட்டு மன்னார்கோவில், புவனகிரி பகுதிகளில் நடவு ,நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பருத்தி, மரவள்ளி, வாழை, வெண்டைக்காய், கத்தரிக்காய், உள்ளிட்ட பயிர் வகைகளும் தண்ணீரில் மிதக்கிறது. இந்நிலையில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ளியங் கால் ஓடை வழியாக திறக்கப் பட்டுள்ளது. அந்த தண்ணீர் தற்போது விளை நிலங்களில் தேங்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
ஆட்சியர் ஆய்வு
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களில் 31 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பின. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை உள்ளாட்சி நிர்வாகங்கள் வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த இளமையாக்கினார் கோவில் குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கடலூர் ஆட்சியர் பால சுப்பிரமணியம், சிதம்பரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். அப்போது இளமையாக்கினார் கோவில் குளம், ஓமக்குளம் பகுதியில் தண்ணீர் விரைவில் வடி வதற்காக நடந்து வரும் பணி களை முடுக்கிவிட்டார். தில்லை அம்மன் ஓடை வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். பொதுப்பணித்துறை அதி காரிகள்,சிதம்பரம் கோட்டாட்சி யர் (பொறுப்பு)ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணை யர்அஜித்தாபர்வீன், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சிதம்பரம், குமாராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ள விளைநிலங்களை வேளாண்துறை அலுவலர்கள் மாவட்ட இணை இயக்குநர் ரவிச்சந்திரன் உதவி இயக்குநர் நந்தினி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களிலும் வறட்சி யின்போதும் காவேரி நீர் பிடிப்பு பகுதிகள் பாதிக்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.