திருவள்ளூர், ஜன 25- விளாப்பாக்கம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தை கட்ட வலியுறுத்தி நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இம் முடிவு எடுக்கப்பட்டது. திருவள்ளூர் அருகில் உள்ள வெள்ளியூர் எல்லைக்கு உட்பட்ட ஆர்.ஆர்.கண்டிகை யில் விளாப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டு அலு வலக பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது வெளி வட்ட சாலை அமைத்த போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடம் இடிக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடம் அமைக்க அதி காரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். விளாப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தை விளாப்பாக்கம் ஊராட்சியில் கட்ட வேண்டும் என விளாப் பாக்கம் கிராம பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் இணைந்து ஜன 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட இணை பதிவாளர் வெள்ளியன்று (ஜன 24), தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதிய கட்டடம் கட்டு வதற்கான திட்டம் ஏதுமில்லை. அடுத்து வரும் காலங்களில் திட்டம் வரும் போது கட்டடம் கட்டுவதற்கான இடத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் பெயரில் கிராம ஊராட்சி சார்பில் பத்திர பதிவு செய்து கொடுத்தால், திட்டம் வரும் போது, புதிய கட்டடம் கட்டி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலை யரசன், வட்டக் குழு உறுப்பினர் கே.முரு கன், கிளை செயலாளர் கண்ணாயிரம், வேட்டைக்காரன் சங்கத்தின் தலைவர் டி.டில்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்கவுதம், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.