districts

img

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: பழவேற்காட்டில் மாணவர்கள் நடத்தினர்

திருவள்ளூர், அக் 27- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் இன்னாள் மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.   இதில் பழவேற்காடு பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி,நேஷனல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி,ஜமீலாபாத் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இப்பள்ளி களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், நான்கு பஞ்சாயத்து களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலை வர்கள்,கவுன்சிலர்கள்,வார்டு உறுப்பி னர்கள்,முன்னாள் மாணவர்கள், பழ வேற்காட்டில் இயங்கி வரும் சமூக தொண்டு அமைப்புகள், வருவாய்த்துறை அதிகாரிகள்,காவல்துறையினர்,பொதுமக்கள் என சுமார் ஆயிரத்து 60 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.   பேரணியானது பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி பழவேற்காடு பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாக பழவேற்காடு மீன் அங்காடி பகுதிக்கு வந்து அடைந்து அங்கு போதை எதிர்ப்பு மற்றும் பாலியல் சீண்டல் எதிர்ப்பு குறித்த உறுதி ஏற்பு நடைபெற்றது. பேரணி யில் மாணவ மாணவிகள் போதை வஸ்து மற்றும் பாலியல் சீண்டலுக்கு எதிரான வாசகங்களையும், பதாகைகளையும் கையில் ஏந்தி பேனர்களை சுமந்தபடி பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியிலும் மற்றும் வியாபாரிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். லைட் ஹவுஸ் ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான்,கோட்டைகுப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சம்பத்,தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல்,பழவேற்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.எல்.சி.ரவி,பழவேற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாத்திமா,பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க நிர்வாகிகள்,சமூகம் சார்ந்த கிராமப்புறம் மேம்பாட்டு நிறுவனம்,உறவு அறக்கட்டளை,கிரசன்ட் பள்ளி நிர்வாகிகள், பல்வேறு கிராம நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.