திருவண்ணாமலை, பிப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணா மலை மாவட்ட குழு உறுப் பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக வும், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலை வராகவும் பணியாற்றி வந்த தோழர் எஸ். பலராமன். பிப். 2 அன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 63. மறைந்த பலரா மனுக்கு ராஜாமணி என்ற மனைவியும், சசிகுமார், விஜயகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். திருவண்ணாமலை தாலு காவில், செங்கொடி இயக்கத்தையும் விவசாயி கள் சங்கத்தை வளர்த் தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் தோழர் பலரா மன். அவரது உடல் திரு வண்ணாமலை- பெரும் பாக்கம் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் டி. ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன், மலை சங்க மாநில பொதுச் செய லாளர் இரா. சரவணன், விவசாயிகள் மாநிலப் பொரு ளாளர் கே. பி. பெருமாள், மாநில துணைத் தலைவர் துளசி நாராயணன், மாநில துணைச் செயலாளர்கள் பி .பெருமாள், நேரு மற்றும் மாநில குழு உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எம் .சிவக்குமார், விவ சாயிகள் மாவட்டத் தலை வர் டி.கே.வெங்கடேசன் மற்றும் பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். பிறகு, மாலை 5 மணிக்கு பெரும்பாக்கம் சாலையில் உள்ள அவரது வீட்டின் அருகே நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செங்கம் சாலையில் உள்ள மயானத்தில் பலராமன் உடல் எரியூட்டப்பட்டது.