districts

img

தோழர் ஆர்.எஸ். ராஜா காலமானார்

திருவள்ளூர், ஏப் 21- ஆவடி பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஆர்.எஸ். ராஜா (வயது 46) காலமானார். மதுரை மாவட்டம் சமயநல்லுரை சேர்ந்த தோழர் ஆர்.எஸ்.ராஜா கடந்த 25 ஆண்டுகளாக ஆவடி பெரியார் நகரில் தங்கி ஹூண்டாய் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஹூண்டாய் கிளை உறுப்பினராக இருந்து பணியாற்றி வந்தார். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக பாடுபட்டு வந்தார். அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி நகர செயலாளர் பாரி, பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அகஸ்டீன், கிளைச் செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆவடி பெரியார் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு தேவிகா என்ற  மனைவியும், சஞ்சய் என்ற மகன் மற்றும் ஸ்ருதி என்ற மகளும் உள்ளனர்.