மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மைய கிளை உறுப்பினர் தோழர் ஆர். வேணுகோபால் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி செவ்வாயன்று (ஆக.30) அயப்பாக்கத்தில் நடைபெற்றது. மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி. தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் உருவப்படத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். குமார் (தென்சென்னை), மா. பூபாலன் (வடசென்னை), ஆவடி பகுதிச் செயலாளர் ஏ. ஜான் எம்.சி., மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சரவணசெல்வி, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ். பிச்சையம்மாள், கே. ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.எஸ். அப்பர், கிளைச் செயலாளர் டி. சீனிவாசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.