கடலூர், அக். 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்டம் ராயர்பாளையம் ஊராட்சி கிளைச் செயலாளர் ஆர்.அர்ச்சுனன் (45) உடல் நலக்குறைவால் காலமா னார். அவருக்கு மனைவி, ஒரு மகள் இரண்டு மகன் கள் உள்ளனர். ராயர் பாளையத்தில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, மாவட்டக் குழு உறுப்பி னர் டி.கிருஷ்ணன், வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழு மலை, வட்ட குழு உறுப்பினர்கள் ஏ.பன்னீர், கே.வடமலை, எஸ்.வினோத் குமார், சேமக்கோட்டை கிளைச் செயலாளர் சி.சந் தோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ராயர் பாளையம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டது.