சென்னை, ஆக. 13-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் முகமது அனிபா (56) சனிக்கிழமை (ஆக. 12) காலமானார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ராயபுரம் - துறைமுகம் பகுதிச் செயலாளராகவும், சி.பி.எம். பகுதிக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். சிறு கடை வியாபாரிகள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். அனிபாவின் உடலுக்கு துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலால், எம்.வி.கிருஷ்ணன், சுகுமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆக. 13) அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.