கிருஷ்ணகிரி,டிச.10- 1985 இல் தேன்கனிக் கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் 2 மலைகளுக்கு நடுவில் உள்ள கோட்டையூரில் 47 தலித் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. சர்வே எண் 179,180 இல் 1.76 ஏக்கர் கையகப்படுத்தப் பட்டு ஆதிதிராவிடர் நல துறையில் நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு,அதில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் அறி விக்கப்பட்டது. 35 ஆண்டு கள் கடந்த பிறகும் வீட்டு மனைகளாக பிரித்து இது வரை ஒப்படைவு செய்யப் படவில்லை. சொந்த நிலம் வீட்டு மனைகள் இல்லாத தால் மூன்றாம் தலைமுறை யினர் உள்பட அனைவரும் நெருக்கடி யில் கூட்டு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பட்டியலின மக்களுக்கு இலவச பட்டா கொடுக்கப்பட்டதில் 25 ஆண்டுகள் கடந்தும் 165 கிராமங்களில் வீட்டு மனைகள் ஒப்படைவு செய்யப்படாத அவல நிலை தொடர்கிறது. கோட்டையூர் தலித் மக்க ளுக்கு அரசால் கொடுக்கப் பட்ட பட்டாவுக்கான நிலத்தை அளந்து ஒப்ப டைவு செய்யக் கோரி இது வரை 100 க்கும் மேற்பட்ட முறை அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை போராட்டங்க ளும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இது குறித்து தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அஞ்செட்டி வட்ட அரசு அலு வலர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வட்டச் செய லாளர் தேவராஜன் தலைமை யில் அஞ்செட்டி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும், வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. வட்டக் குழு உறுப்பினர் குமாரவடிவேல், பசுவராஜ்,சங்கரன் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம் ராஜ், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ்,தளி கெலமங்க லம், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் கள் அனுப்பா இளவர சன்,லெனி ன்முருகன், கலந்து கொண்டனர். பின்னர் அஞ்செட்டி வட்டாட்சி யர் மகேந்திரன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவரகளுடன் பேச்சு நடத்தினார். ஒரு மாதத்திற்குள் கோட்டையூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கான நிலத்தை பிரித்து ஒப்படைவு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும், எடுப்ப தாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து அத்திமரத்தூரில் அரசு வழங்கிய 18 பட்டாக்களுக்கான இடம் வழங்கிடவும், சித்தாண்ட புரத்தில் 50 ஆண்டுகளாக உள்ள 150 வீடுகளுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்கிடவும், நாட்றம் பாளையம் எஸ்டி காலனி மக்களுக்கு 30 ஆண்டு களுக்கு முன்பு அரசு கட்டித்தந்த,தற்போது முற்றிலும் பழுதடைந்து வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் உள்ள வீடுக ளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித் தரவும் நூருந்து சாமி மலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 53 பேருக்கு அரசு வழங்கிய சர்வே எண் இல்லாத பட்டாக் களுக்கு உடனடியாக வீட்டு மனைகள் ஒதுக்கிடவும், மாஸ்தியில் 20 ஆண்டு களுக்கு முன்பு 23 தலித் மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளுக்கு பாதை வசதி செய்து தரவும், மாஸ்தி மக்களுக்கு குட்டை புறம் போக்கில் கட்டிக் கொடுத்த வீடுகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் வீடுகள் கட்டி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதில் சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தினர்.. தொட்ட மஞ்சியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த,தற்போது கடுமையாக சிதில மடைந்துள்ள வாழ தகுதி யற்ற 25 தொகுப்பு வீடு களை உடனடியாக மறு கட்டு மானம் செய்து தரவும், நாட்றம்பாளையம் உள்ளிட்ட தலித் பழங் கடி மலைவாழ் மக்களுக் கும் குறிப்பாக பள்ளி மாண வர்களுக்கும் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்களுடன் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் மகேந்திரன் உறுதியளித்தார். இதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.