கிருஷ்ணகிரி, ஜன. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுசோனை கிளைச் செயலாளரும், வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளருமாக செயல் பட்ட தோழர் ஆதித்திய வர்தனஸ்ரீ கந்துவட்டி, கள்ளச்சாராய கும்பலை எதிர்த்து போராடியதால் சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது 31ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் கெலமங்கலம் ஒன்றியம் அனுசோனையில் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் திங்களன்று (ஜன. 17) நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் பேசுகையில், “விதைத்தவன் உறங்கலாம் விதை உறங்காது என்ப தற்கு சான்றாக தோழர் ஆதித்யவர்தன ஸ்ரீ இப்பகுதியை ஆட்டிப் படைத்த கந்துவட்டி, கள்ளச் சாராய கும்பலை எதிர்த்தும், மக்கள் பிரச்சனைக ளுக்காகவும் தொடர்ந்து போராடினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோத கும்பல் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். ஆனால் அன்று முதல் இந்த பகுதியில் கந்து வட்டி, கள்ளச்சாராய கொடுமை முற்றிலும் ஒழிக்க ப்பட்டுள்ளது. விதையாய் வீழ்ந்த ஆதித்யவர்தன ஸ்ரீயின் லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி அவரிட்ட விதைகளாய் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சாம்ராஜ், ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், தளி ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ், அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவராஜ், சூளகிரி வட்டச் செயலாளர் முனியப்பா, கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சந்திரசேகர், தாமரைச்செல்வி, நிர்வா கிகள் ராஜா இளவரசன், நாகேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.