திருவள்ளூர், டிச 30- கடலில் எண்ணை படலங்கள் படர்ந்த நிலையில், பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயல், காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணை கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளானது. இந்த எண்ணை படலம் கடலில் பழ வேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழ வேற்காடு சுற்றியுள்ள 40 மீனவ கிராம மக்க ளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள். ஏற்கெனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில் எண்ணை படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்கள் தங்களுக்கும் அரசு நிவார ணம், வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். புயலால் சேதமடைந்த படகுகள், மீன் வளைக ளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று (டிச 29), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண், மீன்வளத்துறை இணை இயக்குநர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொன்னேரி சாராட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மீனவ கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவ சங்க பிரதிநிதிகளின் கோரிக்கை கள் அனைத்தும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ சமுதாயத்தை சார்ந்த இளை ஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் பெறவும் மீன்வளத்துறை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கு வழிமுறைகள் மற்றும் கடன் உதவிகள் பெற்று தருவோம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.