districts

img

சிதிலமடைந்த இருளர் பழங்குடி மக்களின் தொகுப்பு வீடுகள் அபாயத்தை உணராத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, ஆக. 2-

     கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆந்திர எல்லையை ஒட்டி யுள்ள கெ.கொத்தூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருளர் பழங்குடி மக்க ளுக்கு ஒன்றிய அரசால் 25 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.  

    அந்த குடியிருப்புக்கு குடிநீர், கழிப்பறை, சாலை, மின்சாரம் என்று எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. இருள் சூழ்ந்துள்ளது. போதா குறைக்கு, அனைத்து வீடுகளிலும் சுவர்கள் காரை பெயர்ந்து சிதிலமடைந்து, மேற்கூரைகள் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தொங்கிக் கொண்டு உள்ளது.

    எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சில வீடுகளில் கான்கிரீட் மேல் கூரை முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. தார்ப்பாய், பாலிதீன் விரிப்புகளை கொண்டு வசித்து வருகின்றனர்.

   இது குறித்து பல முறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவ லங்களிலும் கோரிக்கை மனு கொடுத்தனர்.  அலைந்தது தான் மிச்சம். இதுவரைக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை எட்டி கூட பார்க்கவில்லை என்று வேதனையை வெளிப் படுத்தினர்.