சென்னை,ஜூன் 9-
ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழ னன்று இரவு 11 மணிக்கு வந்த ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.
பெரம்பூர் அருகே 2 பெட்டிகள் தடம் புரண்ட தையடுத்து ரயில் நிறுத்தப் பட்டது. தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில் பெட்டிகளையும் சரி செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணியை ஊழியர்கள் உடனடியாக தொடங்கினர்.குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்ட ரயில் தடம் புரண்டது எப்படி என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ரயில்வே பாது காப்பு படை போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து சம்ப வத்துக்கு பின்னர் அனைத்து வழித்தடங்களிலும் உஷாராக இருக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் சென் னையில் ரயில் தடம் புரண்டிருக்கும் சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.