districts

சென்னை முக்கிய செய்திகள்

நலவாரிய குளறுபடிகளை சரி செய்து, சர்வர் இயக்கத்தை வேகப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, மே 9- நலவாரிய குளறுபடிகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என அமைப்புசாரா தொழில்களின் பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.லோகநாதன், சிஐடியு மாநிலக்  குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு அரசு உடலுழைப்பு தொழி லாளர்களை பாதுகாக்கும் வகையில் 17 வகையான நலவாரியங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழிலாளிகளின் குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து வருவது மிகவும்  பாராட்டுக்குரியது. ஆனால், கொரோனா பேரிடர் காலத்தில் இந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமானது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், சலுகைகள் பெற பதிவேற்றம் செய்யத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘மெதுவான சர்வர் இயக்கம்’ என்பது சரி செய்யப்படவில்லை. மேலும் சில நாட்கள்  அதிகாரிகளே பராமரிப்பு செய்ய வேண்டும்  என்று சொல்லி. செயலியின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறார்கள்.  மேற்குறிப்பிட்ட காரணங்களால் பயனாளிகள், தொடர்ந்து வாரிய சலுகை களை பெற முடியாமலும், பதிவு செய்ய முடியாமலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றை பதிவேற்றம் செய்ய முடியாமல் மிகுந்த மன உளைச் சலில் இருக்கிறார்கள். சர்வர் சரிவர வேலை  செய்யாததால் பலமுறை அவர்கள் பதி வேற்றம் செய்ய வேண்டியிருந்தது. எனவே,  அவர்கள் ஆயுள் சான்று பதிவேற்றம் செய்வ தற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும். நாங்கள் தொடர்ச்சியாக கேட்கும் வேண்டுகோளின் அடிப்படையில் சர்வர் சரிவர வேலை செய்தாலும், செய்ய வில்லை என்றாலும் நேரடியாக வரும் தொழி லாளர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அதற்கான ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும். வாரிய செயல்பாடுகளின் தற்போதைய நிலை பொதுமக்கள், வாரிய உறுப்பினர்களிடையே தமிழக அரசின் ஒரு நல்ல திட்டத்தை மதிப்பிழப்பதாக அமைகிறது. எனவே, உடனடியாக இதனை சீர்செய்ய வேண்டும் என்றும் அரசின் நன்மதிப்பை தக்கவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, மே 9- மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த குஜராத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த குஜராத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகளை தனி அறைகளுக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர்கள் நான்கு பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்தனர்.

மாணவர்கள்  மீது வழக்குப்பதிவு

சென்னை, மே.9- சென்னையில் அரசு பஸ் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரு.வி.க.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மேற்கூரை மீது  கல்லூரி மாணவர்கள்  பயணம் மேற்கொண்ட னர். இந்த மாணவர்கள் சென்டிரல் அருகே வந்தபோது பஸ்சை திடீரென நிறுத்தச் சொல்லி மேற்கூரையில் இருந்து  கீழே குதித்தனர். மாணவர்கள் பஸ்சில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சம்பந்தப் பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார்  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாலை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து, அவர்களை விரைந்து அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பணிமனை அலுவலகங்கள் இடமாற்றம்
 

சென்னை, மே 9 - அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார், வரிக்கட்டணம் செலுத்த 100 மற்றும் 101வது பணிமனை அலுவலகங்கள் வெள்ளிகிழமை  முதல்  புதிய முகவரியில் செயல்படும். பணிமனை எண் 100, எண்.16, பிரான்சன் கார்டன் சாலை,  கீழ்ப்பாக்கம் என்ற முகவரியிலிருந்து கதவு எண்.4/1, கோயில்  தெரு, கீழ்ப்பாக்கம், இந்த முகவரிக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் பணிமனை எண் 101, கதவு எண்.4/1, கோயில்  தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரியிலிருந்து புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், (கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரில்) இங்கு மாற்றப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர்  வரி  கட்டணம் செலுத்த இந்த  புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:  பகுதிப் பொறியாளர் 8144930908, துணை பகுதிப் பொறியா ளர் 8144930222, துணை பகுதிப் பொறியாளர் 8144930223.

ஆக்கிரமிப்பு அகற்றம்

சென்னை, மே 9- பாலவாக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். பல்கலை நகர் 3வது குறுக்கு தெருவில் ஆக்கிரமிப் ப்பாளர்களால் தன்னிச்சையாக அத்துமீறி அமைக்கப்பட்ட தடுப்பு குறித்து  மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தெருவை ஆக்கிரமித்து எப்படி தடுப்பு ஏற்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி எச்சரித்தனர். இதையடுத்து, வரிசையாக நட்டு வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்புகளை இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். இதற்கு  குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லாரி மோதி  இளைஞர் பலி

சென்னை, மே 9- சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள கோவிலம்பாக்கம் முத்தையா நகர் அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் ஆனந்தன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  ஆனந்தன், வியாழனன்று வேலைக்கு செல்வதற்காக, தனது அண்ணன் சோலை ராஜனுடன் புறப்பட்டார். சோலை ராஜன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, ஆனந்தன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லும் போது, பின்னால் வந்த ஒரு கழிவுநீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காய மடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். சோலைராஜன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.கூவம், பக்கிங்காம் ஆறுகளில் அடுத்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கூவம், பக்கிங்காம் ஆறுகளில் அடுத்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை,மே 9- சென்னையில், தென் மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை தூர்வாரு வதற்கு சென்னை மாநக ராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம்  ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. மேலும் சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங் காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டி டங்களும் உள்ளன. வீடு கள், சிறு தொழிற்சாலை கள், உணவு விடுதிகள ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளன. சென்னை நகரம் வெள்ளத் தில் மிதக்க இதுபோன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாகும். ஆக்கிர மிப்புகள் காரணமாக மழைக் காலங்களில் வெள்ளம் வடி வதில் காலதாமதம் ஏற்படு கிறது. இதற்கிடையே நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்ற நிதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம்  செலுத்த தொடங்கியுள்ள னர். சென்னையில், பக்கிங் காம் கால்வாயில் ஆக்கிர மிப்புகள் கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக் கப்பட்டுள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் கூவம் ஆற்றில்  ஆக்கிரமிப்புகள் கணக் கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடு கள் விரைவில் தொடங்கு கிறது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் ஆக் கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருகும் பயிர்கள்: வறட்சி நிவாரணப் பணிகளை துவங்க சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை, மே 9- திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வறட்சி நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு துவக்க வேண்டும் என சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,965 பாசன ஏரிகள்  இருந்தாலும், கடும் வெயில் காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது. மேலும் பாசனத்திற்கு வழங்கப்படும் சாத்தனூர் அணை, மிருகண்டா நதி அணை, குப்பநத்தம் அணை, செண்பகத் தோப்பு அணை ஆகியவை வறட்சியின் காரண மாக நீர்மட்டம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களும், ஜவ்வாது மலை பகுதி யில் சாமை போன்ற சிறு தானிய பயிர்க ளும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆரணி, களம்பூர், காஞ்சி, செய்யாறு பகுதி களில் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது, தற்போது கடும் வெயிலின் காரணாமாக செங்கம் தாலுகாவில் தாழையூத்து, கட்ட மடுவு, கீழ்பென்னத்தூர் தாலுகாவில் அரும் பாக்கம், செல்லங்குப்பம், கலசபாக்கம் கலாடி உள்ளிட்ட கிராமங்களில் நெல் பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என அதில் குறிப்பிடுள்ளார்.

வேலூர்:  மே14 உள்ளூர் விடுமுறை

வேலூர்:  மே14 உள்ளூர் விடுமுறை வேலூர், மே 9- வேலூர் மாவட்டம் குடி யாத்தம் நகரரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா வரும் 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதால், அதில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிடோர் கலந்து கொள்ள வசதியாக மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதில் ஜூன் 22ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறி விக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற ஆட்சியர் வேண்டுகோள்

வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற ஆட்சியர் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி, மே 9- வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறு வதற்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முக வர்கள் உரிய ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமார் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதில் மாவட்ட ஆட்சி யர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சின்னசேலம் வட்டம் அ.வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு சட்டமன்றத் தொகுதி வாரியாகவும், அஞ்சல் வாக்குகள் எண்ணும் இடத்திலும், வேட்பாளர்கள் சார்பில் முக வர்கள் நியமிப்பது தொடர் பாகவும், அதற்கான வாக்கு எண்ணிக்கை யின் போது எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை யும் ஏற்படாமல் அமைதி யாக நடத்தி முடிக்க அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.