districts

img

மாமல்லபுரத்தில் நடைபாதை கடைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளித்திடுக

செங்கல்பட்டு, டிச.11- மாமல்லபுரத்தில் திடீரென அகற்றப்பட்ட நடைபாதை சிறு கடைகளை மீண்டும் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 60க்கும்  மேற்பட்ட சாலையோர சிறுகடை வியா பாரிகள்  வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது சில வரையறைகளுடன் கடை நடத்த அனுமதி  தந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  அர்ஜூனன் தபசு அருகில் கடை வைத்து  வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கியிருந்த நிலையில் சில வியாபாரிகள் அப்பகுதியில் கடை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று  (டிச 11) வருவாய்த் துறையின் சார்பில்  முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அர்ஜூனன் தபசு அருகில் வைக்கப் பட்டிருந்த 16 சாலையோர கடைகளை அகற்றி யுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி யுள்ள இடத்தில் தான் கடை வைத்துள்ளோம் என தெரிவித்து வருவாய்த்துறையினர் கடைகளை வலுக்கட்டாயமாக அகற்றி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாலை யோர வியாபாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட  முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், முறைசாரா தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.யோபுராஜ், சிபிஎம் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் செங்கல்பட்டு கோட்டாட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேலும் மாவட்ட  நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் வைக்கப்பட்ட கடைகளை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தனர். அகற்றப்பட்ட கடைகளை அதே இடத்தில் மீண்டும் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

;