districts

img

புது உச்சிமேடு குடியிருப்பில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, செப். 20 - கள்ளக்குறிச்சி மாவட்டம்,தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட புது உச்சிமேடு காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் வறட்சியின் காரணமாக கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளதால் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் ஆத்திரமுற்ற கிராம மக்கள் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலை யில் புது உச்சிமேடு காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தியாக துருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, வரஞ்சரம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நட வடிக்கை  எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.  இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.