விழுப்புரம், ஜன.28- விழுப்புரம், வானூர், பென்னாத் தூர், திருவண்ணாமலை பகுதி விவ சாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறி வித்தார். விழுப்புரம் மாவட்டம், வழுத ரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.70 கோடி செல வில் அமைக்கப்பட்ட மணி மண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலை யுடன் கூடிய நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜன.28) திறந்து வைத்தார். மேலும், மொத்தம் ரூ.882 கோடி செலவில் 231 முடிவுற்ற திட்டப் பணி களை திறந்து வைத்தும், 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி யும், 35,003 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதலமைச்சர் உரையாற்றினார். தடுப்பணைகள் சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்க வேண்டும் என்று செஞ்சி, விக்கிர வாண்டி, விழுப்புரம், வானூர், பென்னாத்தூர் மற்றும் திருவண்ணா மலை பகுதி உழவர் பெருமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறை வேற்றும் வகையில், ரூ. 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேத மடைந்த, தளவானூர் அணைக்கட்டு ரூ. 84 கோடி ரூபாய் செலவில் புனர மைக்கப்படும். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்பீட் டில் தடுப்பணை அமைக்கப்படும். காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டி பேரூராட்சியில் இருக்கும் கக்கன் நகரில், ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில், பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும். செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,. மு.பெ. சாமி நாதன், ஆர். ராஜேந்திரன், எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி.கணேசன், மக்களவை உறுப்பினர்கள் எஸ். ஜெகத்ரட்சகன், து. ரவிக்குமார், எம்.எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். மஸ்தான், ஆர். லட்சுமணன், அன்னியூர் சிவா, எ.ஜெ. மணிகண்ணன், சி.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.