ஆம்பூர், டிச.20 - திருப்பத்தூர் மாவட்டத்தில் 1741 நபர்களுக்கு 1 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது மாவட்டம் தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று அந்த மனுக்குகளின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்தார் மு.க.ஸ்டாலின். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இத்திட்டத்தின்கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 1741 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 477 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 32 நபர்களுக்கு ரூ.4.22 லட்சம்மதிப்பிலான குடும்ப அட்டை, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 122 நபர்களுக்கு ரூ.1464 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 6 நபர்களுக்கு ரூ. 8 மதிப்பிலான வேலைவாய்ப்பற்றோர் காண உதவிகள், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 280 நபர்களுக்கு ரூபாய் 1.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1741 நபர்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில், இணையதள முகவரியிலும் 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை பொதுமக்கள் அணுகி பயன் அடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.