சென்னை, நவ.15- நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதி கரிக்க ஆய்வுகள் தேவை என்று சுகா தார துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழக அரசின் சுகாதார மாநாடு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளா கத்திலுள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செவ்வாயன்று (நவ.15) நடைபெற்றது. இதனை முதல்வர் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில், 100 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு அடைந்தி ருக்கிறது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னி லையில் இருக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிசிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து கொண்டி ருக்கிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலகளவில் முதலிடம் தமிழ்நாடு. இதேபோல் மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் வேண்டும். சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசைப் படுத்துகிறார்கள். இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டு வர வேண்டும். மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீர்செய்தால் மட்டும் போதாது. மருத்துவத் துறை - மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும். சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும். நோய்கள் புதுப்புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் முறைகளும் பன்முனை கொண்டதாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்திக் குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படியானால் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதற்கு அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலைச் செய்யலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும். நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆராய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், க.பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.