districts

சிதம்பரம் கோவில்: தீட்சிதர்கள் வழக்கு

சென்னை, ஏப். 3 - சிதம்பரம் நடராஜர் ஆலய கனக சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கக் கோரி ஒரு பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரண மாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துகின்றனர். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போரட்டம் நடத்த அனுமதிக்கூடாது என ஆட்சியர், வருவாய் மற்றும் காவல்  துறைக்கு உத்தரவிட வேண்டும். கோவில் விவகாரத்தில் தலையிடக்கூடாது என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.