districts

சென்னை ரேடியல் சாலையில் இருதய சிகிச்சை மையம் திறப்பு

சென்னை, ஆக. 3-

     சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் இருதய சிகிச்சை மையத்தை  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.  

    சர்வதேச தரத்தில் இதயம் மற்றும் ரத்தநாளம் தொடர்பான சிகிச்சைகளையும், இந்த நவீன சிகிச்சை மையம் முழுமையாக வழங்கும். இந்த நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர்,  காவேரி மருத்துவமனையும் அதன் புதிய மைய மும்  உயிர்காக்கும் பணியை சிறப்பாக செய்யும் என்ற தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.  உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கே இணையான உயர்தர இதயநல சிகிச்சையை வழங்குவதில் காவேரி மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

     அனைத்து நோயாளிகளுக்கும் இதயம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வை வழங்குவதற்கான மிக நவீன, இடையீட்டு இதயவியல் சிகிச்சை மையமாக காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் உரு வாக்கப்பட்டிருக்கிறது என்று  மருத்துவமனையின் செயல்  தலைவர் டாக்டர். எஸ். சந்திர குமார் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர்.  அரவிந்தன் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.