சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு அலுவலகத் திறப்பு விழா சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. ஜோதி நகர் 10ஆவது தெருவில் அமைந்துள்ள அலுவலகத்தை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், திருவொற்றியூர் மண்டல அலுவலர் ந.சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.