கள்ளக்குறிச்சியில் இளைஞர் திறன் திருவிழா
கள்ளக்குறிச்சி, டிச. 1- கள்ளக்குறிச்சியில் இளைஞர் திறன் திருவிழா சனிக்கிழமை (டிச. 3) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரி வித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை அறிந்து கொள்வதோடு திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெரும் வகையில் அரசு துறைகளையும், தனியார் நிறு வனங்களையும் ஒருங்கிணைந்து ஊராட்சி ஒன்றிய அளவில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படவுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீன் தயாள் உபாத்யாய-கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா சனிக்கிழமையன்று(டிச.3) நடைபெறுகிறது. இதில் 8 ஆம் வகுப்புக்கு மேல் படித்த 35 வயதிற்குட்பட்ட அனைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கு பின் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறு வனங்கள் வேலைவாய்ப்பை வழங்க வும் ஏற்பாடு செய்யப்படும். சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை இந்த முகாமில் அறிந்து கொள்ளலாம். தகுதியான வேலைவாய்ப்பற்ற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
ரேசன் அரிசி பறிமுதல்
கள்ளக்குறிச்சி, டிச. 1- கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டாச்சிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் கூத்துக்குடியிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நடத்திய விசார ணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (50), வேலூர் மாவட்டம் சஞ்சீவி ராயர்புரம் காட்பாடியை சேர்ந்த நாகராஜன் (60) என்பதும், ஒரு டன் ரேசன் அரிசியை சட்ட விரோதமாக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குற்றவாளிகளை அடையாளம் காண 500 நவீன கேமராக்கள்
திருவண்ணாமலை, டிச. 1- திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை தமிழக காவல்துறை தலைவர் ( டிஜிபி) சைலேந்திரபாபு வியாழனன்று (டிச. 1) ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவண்ணாமலை தீப விழாவின் போது, ஐஜி தலைமையில் 4 டிஐஜி, 27 காவல் கண்காணிப்பாளர்கள், 12,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு தீப விழாவுக்கு 27 ஆயிரம் சிறப்பு பேருந்து கள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட வாகனங்களில், 30 லட்சம் பேர் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் 52 இடங்களில் வாகன நிறுத்தமும், குற்றவாளிகளை அடையாளம் காண 500 நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது”என்றார்.
வேன் மோதி ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி, டிச. 1- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (50). அதே ஊரைச் சேர்ந்தவர் குணபூசணி (52). இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகே சாலை யோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மார்க்கத்தி லிருந்து சேந்தநாடு நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மோதியதில் ராணி சம்பவ இடத்திலேயே பலியானார். படு காயமடைந்த. குணபூசணி உளுந்தூர் பேட்டை அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவல் அற்நிது சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் காவல் துறையினர் ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை தேடி வரு கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு காவல்துறை பாராட்டு
கள்ளக்குறிச்சி, டிச. 1- திருவண்ணாமலை மாவட்டம், கீழ் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வடதொரசலூரிலிருந்து ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி வந்த போது, கீழே கிடந்த பையை எடுத்து பார்த்த போது அதில் 9,500 ரூபாய் இருந்தது. உடனடியாக அருகில் இருந்த தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சாத்துபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிஸ்தீன் (29) இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்பக்கெட்டில் வைத்திருந்த பை தொலைத்து விட்டதாக புகார் கொடுக்க காவல் நிலையம் வந்தார். அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
புகையில்லா புதுவை நகரம்: முதல்வர் பேச்சு
புதுச்சேரி, டிச. 1- ஒன்றிய மின் அமைச்சக ஒருங்கிணைப்புடன், புதுவை அரசின் புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை மற்றும் மின்துறை ஒருங்கி ணைந்து மின்சார வாகன கண்காட்சியை நடத்துகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடை ஊக்கு விக்கும் வகையில் 5 நாட்கள் நடை பெறும் கண்காட்சிக்கு முதல மைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகை யில், சுற்றுலா நகர மாக உருவாகும் புதுவை யில் புகையில்லாத நிலையை உருவாக்க வேண்டும்”என்றார்.